சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களின் துக்கநாள்-காணாமல்போனோர் உறவுகள்

You are currently viewing சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களின் துக்கநாள்-காணாமல்போனோர் உறவுகள்

இலங்கையின் சுதந்திரநாளை துக்க நாளாக கடைப்பிடிக்குமாறு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த அழைப்பினை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி விடுத்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், இறுதி யுத்தத்தில் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பாக அரசு அக்கறை செலுத்தாத நிலையில், சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு அரசு தயாராகி வருகின்றது.

இந்த நிலையில், சுதந்திர நாளை துக்க நாளாக அனைத்து மக்களையும் கடைப்பிடிக்குமாறும் அன்றைய நாள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார். இதேவேளை குறித்த நாளன்று வடக்கிலும் கிழக்கிலும் சம நேரத்தில் போராட்டங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள