சிறீலங்காவில் சற்று முன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா!

You are currently viewing சிறீலங்காவில் சற்று முன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா!

சிறீலங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 199 ஆக உயர்வடைந்துள்ளது.

ஏற்கனவே 198 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 138 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் 54 பேர் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் இதுவரை கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 108,742 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இந்த தொற்றால் உலகளவில் 1,777,892பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 3 இலட்சத்து 76 ஆயிரத்து 372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள