சிறீலங்காவில் தொடரும் தொற்று 460 ஆக உயர்வு!

You are currently viewing சிறீலங்காவில் தொடரும் தொற்று 460 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என தொற்று நோயியல் பிரிவு இன்று காலை அறிவித்துள்ளது. இதையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 460 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மூன்று பேர் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டிருந்தனர். நேற்று மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 32 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 335 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருந்து வருவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 118 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள