சிறீலங்காவில் 5 ஆயிரத்தை தாண்டியது கொரோனா மரணங்கள்!!

You are currently viewing சிறீலங்காவில் 5 ஆயிரத்தை தாண்டியது கொரோனா மரணங்கள்!!

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5000 ஐ தாண்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் மேலும் 98 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவான நிலையில், கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5017ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 78 ஆண்களும் 20 பெண்களும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நேற்று மேலும் 2,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,26,043 உயர்ந்துள்ளது.

இந்நிலையில், 30,330 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments