சிறீலங்கா காவற்துறைக்கு நடந்த விபரீதம்!

You are currently viewing சிறீலங்கா காவற்துறைக்கு நடந்த விபரீதம்!

கிளிநொச்சியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் சிறீலங்கா காவற்துறை உத்தியோத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் கடமையாற்றும்  உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை துரத்திச் சென்றவேளை மிருக வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுதுவக்கு வெடித்ததில் 37 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை

வவுனியா – புளியங்குளத்தில் சிறீலங்கா காவற்துறையினரின் வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவரை நேற்று முன்தினம் இரவு சிறீலங்கா காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக சென்ற சிறீலங்கா காவற்துறையினரின் வாகனத்தின் மீது வீதியில் நின்ற ஒருவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நபரை புளியங்குளம் சிறீலங்கா காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவரை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments