சீனா : வெளிநாட்டவரின் வருகைக்கு எல்லைகள் மூடப்பட்டுகின்றன!

  • Post author:
You are currently viewing சீனா : வெளிநாட்டவரின் வருகைக்கு எல்லைகள் மூடப்பட்டுகின்றன!

சீனாவின் எல்லைகளுக்கு வெளியே கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதன் காரணத்தால், வெளிநாட்டவர் சீனாவிற்குள் நுழைவதை தற்காலிகமாக தடை செய்ய சீனா முடிவு செய்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம் இணையதளத்தில் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

முன் கூட்டியே சீனாவுக்கு, செல்லுபடியாகும் நுழைவுச்சான்று அல்லது சீனாவில் குடியிருப்பு அனுமதி பெற்றவர்களுக்கும் இந்த தடை பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

மார்ச் 28 நள்ளிரவு முதல் இந்த தடை அமுலுக்கு வருகின்றது என்றும் APEC அட்டைகள் உள்ளவர்களுக்கும் சீனாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்பு இடைநிறுத்தப்படுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள