சுவிசில் போலி விபத்துகளை ஏற்படுத்தி மோசடி செய்த இலங்கையர் கைது!

You are currently viewing சுவிசில் போலி விபத்துகளை ஏற்படுத்தி மோசடி செய்த இலங்கையர் கைது!

சுவிட்சர்லாந்தில் பெரும் மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 56 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த நபர் 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை 37 போலியான வாகன விபத்துக்களை ஏற்படுத்தி, அதன் மூலம் பெரும் தொகை பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த நபர் இவ்வாறான விபத்துகளை ஏற்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறாக 50 ஆயிரம் பிராங்குளை குறித்த நபர் மோசடி செய்துள்ளதாகவும், கார்களுக்கு ஏற்பட்ட சேதம் 120,000 பிராங்குள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையை சூரிச் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அத்துடன், சந்தேகநபர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிராங்குளை செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments