சுவிட்ஸர்லாந்தில் பனிச்சறுக்கில் ஈடுபட சென்ற ஐவர் உயிரிழப்பு!

You are currently viewing சுவிட்ஸர்லாந்தில் பனிச்சறுக்கில் ஈடுபட சென்ற ஐவர் உயிரிழப்பு!

breaking

சுவிட்ஸர்லாந்தில் பனிச்சறுக்கில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த நிலையில் காணாமல் போன ஐவர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டுப் பொலிஸார் இன்று (11) தெரிவித்துள்ளனர்.

இத்தாலியுடனான எல்லைக்கு அருகிலுள்ள, பிரசித்திபெற்ற மெட்டர்ஹோர்ன் மலைப்பகுதிதியில் பனிச்சறுக்கில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் 6 பேர் காணாமல் போயிருந்தனர்.

இவர்களை கண்டுபிடிப்பதற்காக தேடுதல்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் இவர்களில் ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரவித்துள்ளனர். மற்றொருவரை தேடும் பணிகள் தொடர்கின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டவர்கள் என்பதையோ அவர்களின் வேறு அடையாளங்களையோ அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments