டெல்லியில் பேரணி நடத்தும் தமிழ்நாடு விவசாயிகள்!

You are currently viewing டெல்லியில் பேரணி நடத்தும் தமிழ்நாடு விவசாயிகள்!

ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த பல மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 2 வாரங்களாக டெல்லி ஜந்தர் மந்தரிலும் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு வந்து இன்று முதல் (வியாழக்கிழமை) சில நாட்கள் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. 
இதை முன்னிட்டு சங்கத்தின் மாநில பொருளாளர் பெருமாள், செயலாளர் விஜயமுருகன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “தமிழக விவசாயிகள் அனைவரும் பாரம்பரிய வேட்டி-சட்டையுடன் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் டெல்லி ரெயில் நிலையம் முன் ஒன்றுகூடி ஜந்தர் மந்தருக்கு பேரணியாக செல்வோம். பின்னர் சிங்கு எல்லைக்கு சென்று விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்போம். புதிய வேளாண் சட்டங்கள், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் மனு அளிப்போம்” என்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments