தமிழகத்தில் கொரோனா : இன்று மட்டும் 798 பேர் பாதிப்பு!

  • Post author:
You are currently viewing தமிழகத்தில் கொரோனா : இன்று மட்டும் 798 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 798 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 90 பேருக்கும், திருவள்ளூரில் 97 பேருக்கும் அரியலூரில் 33 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் இன்று மட்டும் 11,584 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் 798 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 53 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 90 பேருக்கும், திருவள்ளூரில் 97 பேருக்கும் அரியலூரில் 33 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள