தமிழகத்தில் கொரோனா ; தொற்று எண்ணிக்கை 1937 ஆக அதிகரிப்பு!

  • Post author:
You are currently viewing தமிழகத்தில் கொரோனா ; தொற்று எண்ணிக்கை 1937 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1937 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 570ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டு கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று கொரோனா பாதிப்பிலிருந்து 81 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். அதன் மூலம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1101 ஆக அதிகரித்துள்ளது. இன்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1937 ஆக அதிகரித்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 5 பேருக்கு நேரடித் தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 52 பேரில் 47 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். அதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 570ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள