தமிழகத்தை உலுக்கும் கொரோனா!

You are currently viewing தமிழகத்தை உலுக்கும் கொரோனா!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர் அதிகரிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் 24 மணி நேரத்தில் 98 பேர் பலியானதுடன் சுமார் 17 ஆயிரம் பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

நேற்று (எப்-28) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று மலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றுதியானவர்களது எண்ணிக்கை 16 ஆயிரத்து 665 ஆக பதிவாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 4 ஆயிரத்து 647 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி 32 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் சென்னையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 3 இலட்சத்து 23 ஆயிரத்து 452 ஆகவும் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 4 ஆயிரத்து 661 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 11 இலட்சத்து 30 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சிகிச்சை பலனின்றி மேலும் 98 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 13 ஆயிரத்து 826 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 308 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments