தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: மருத்துவர்கள் எச்சரிக்கை!

You are currently viewing தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: மருத்துவர்கள் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஒரே நாளில் 15,684 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 94 பேர் உயிரிழந்துள்ளனர்

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,250 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு 1,142, கோவை 1,056 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழந்தனர். காஞ்சிபுரம் 9, சேலம் 5, செங்கல்பட்டு 4, மதுரை, தஞ்சையிலும் 4 என உயிரிழப்பு நேர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் இணை நோய் இல்லாத 14 பேர் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments