தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் – வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009)

You are currently viewing தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் – வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009)

09.05.2009 அன்று செல்தாக்குதல்களில் கொல்லப்பட்ட தமிழர்கள்  அவ் இடங்களிலேயே எரிக்கப்பட்ட அவலம்   -வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள். 

தமிழீழம்

மே 09 2009

சனிக்கிழமை காலை 7 மணியளவில்  சிங்கள பேரினவாத  அரசால் நடாத்தப்பட்ட செறிவான செல்தாக்குதலால் சுமார் 50 மேற்பட்ட கடுமையான காயக்காரர்கள் மட்டும் தற்காலிகமாக இயங்கும் சிறிய பாடசாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தார்கள்.  சுமார் 165000 வரையானவர்கள் 8 சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட சிறிய நிலப்பரப்புகள் பேரினவாத  சிறிலங்கா படைகள் தங்களது முழு சூட்டு வலுவையும் முடுக்கிவிட்டிருந்தது இது சர்வதேச்திற்கு சிறிலங்கா வழைங்கிய உறுதி மொழிக்கு எதிரானதாக இருந்தது

தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் - வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009) 1

அதே வேளை 120,000-165,000 உட்பட்ட மக்கள் வசிக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்ட வன்னிப்பகுதியில்  (முள்ளிவாய்க்கால்) ஊட்டச்சத்து குறைபாட்டால் கர்ப்பிணி பெண்களும் பாலுாட்டும் தாய்மாரும், வயது முதிர்ந்தவர்களும் பெரும் இன்னல்களை சந்தித்தார்கள், கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய் மாரும் அந்த சிறிய பாடசாலையில் இயங்கும் வைத்தியசாலையில் தங்களுக்கு பால்மா வழங்குமபடி வைத்தியர்களை கெஞ்சிக் கொண்டிருந்தார்கள் வைத்தியசாலையிலோ அத்தியவசிய பால்மா, மருந்துகள் என எவையும் இருப்பில் இல்லாததினால் வைத்தியர்களும் தன்னார்வலர்களும் எதுவும் செய்ய முடியாத கையறுநிலையில் இருந்தனர்.

வன்னிக்கு 30 மெ.ரொன்  (metric ton)பொருட்களை அனுப்புவதாக  சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தலை வெளியிட்ட போதும் திருகோணமலையில் உள்ள கடற்படையினர் ஐ.சி.ஆர்.சியின் கப்பலிலிருந்து 5 மெ.ரொன் (metric ton)உள்ளுர் ஊட்டச்சத்து மா பைக்கற்றான ’சமபோசாவை’  எடுத்துக்கொண்டது என  கொழும்பிலிருந்து செயற்படும் பணியாளர் தகவல் தெரிவித்தனர்.

தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் - வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009) 2

கடும் செல் தாக்குதலினால் கரையை அடைய முடியாது சிக்கிலிற்குள்ளான கப்பல் ஒரு மாதிரியாக குறைந்தளவு பொருட்களை இறக்கிவிட்டு 450 காயமடைந்தவர்களையும் அவர்களோடு துணைக்கு ந்தவர்களையும் எற்றிக்கொண்டு திரும்பியது.

ஊட்டச்சத்து, உணவுப் பொருட்களை குறைத்து வழங்குவதன் ஊடாக (தமிழீழ அரசு) தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மக்கள்  வைத்திருக்கும் அபிமானத்தை உடைக்கும் ஒரு ஆயுதமாகவே   சிறிலங்கா அரசாங்கமும் படைகளும் மேற்கொள்வதாக மக்களிற்கான உதவிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

வயதானவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் மூச்சுத்திணறி இறப்பது அதிகரித்தது அதே கர்ப்பிணி பெண்களிற்கான ஈமோகுளோபின் குறைபாடுகளால்  குழந்தை பிரசவ சிக்கல்கள் தோன்றி அவர்கள் இறப்பதும் அதிகரித்ததுடன் மஞ்சள் காமாலையுடன்  குழந்தைகள் பிறந்தன  என வன்னியின் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன

செல்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் அவ் இடங்களிலேயே எரிக்கப்பட்டனர் அல்லது புதைக்கப்பட்டனர் மருந்தும் மருத்துவ வசதிகளும் அதிதாகியதால் இறப்பவர்களின் தொகையும் மிகவும் அதிகரித்தது​

தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் - வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009) 3
தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் - வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009) 4
தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் - வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009) 5
தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் - வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009) 6
தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் - வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009) 7
தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் - வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009) 8
தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் - வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009) 9
தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் - வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009) 10
தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் - வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009) 11
தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் - வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009) 12
தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் - வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009) 13
தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் - வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009) 14
தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் - வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009) 15
தமிழர்கள் எரிக்கப்பட்ட அவலம் - வலி சுமந்த மாதத்தின் 09 ம் நாள் (09.05.2009) 16
4 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments