தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் ஈருருளிப் பயணம் சுவிஸ் நாட்டிற்கு சென்றது!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் ஈருருளிப் பயணம் சுவிஸ் நாட்டிற்கு சென்றது!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும்   கடந்த  17.02.2023    காலை 10 மணியளவில் பிரித்தானிய இல்லத்துக்கு முன்பாக ஆரம்பித்து ,பிரதமர் அலுவலகத்திலும் வெளிவிவகார அமைச்சகத்திலும் மனுவைக் கையளித்த பின்னர்  ஐ . நா நோக்கி ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டதோடு,சம நேரத்தில்  தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி   நெதர்லாந்திலிருந்தும்   மனித நேய ஈருருளிப்பயணம்   ஆரம்பமாகியிருந்தது.

இந்த   மனித நேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் டென் ஹாக்  நகரில் அமைந்துள்ள  அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்  ( International Criminal Court)    முன்பாக  கனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று, நெதர்லாந்து நாட்டினைக்கடந்து ,பின் பெல்சியம் நாட்டினை ஊடறுத்து ,பெல்சியத்திலுள்ள மற்றுமொரு நகரமாகிய அர்லோன்(Belgiem Arlon) நகரத்தை அடைந்து அங்கு மாநகரசபை முதல்வரைச் சந்தித்து தமிழின அழிப்புச் சம்பந்தமான மனு கையளிக்கப்பட்டு,பின் லுக்ஸ்சம்பூர்க்(Luxemburg) எல்லையை வந்தடைந்த ஈருருளிப்பணப் போராட்டம் யேர்மனி நோக்கி பயணித்து,சார்புறூக்கன் மற்றும் லண்டோவ் நகரங்களில் அரசியல் சந்திப்புக்கள் மற்றும் மனுக்கையளிப்பினைத் தொடர்ந்து ஜேர்மன் நாட்டினை ஊடறுத்து,பிரான்ஸ் நாட்டுக்குள் சென்றது.தொடர்ந்து பிரான்ஸ் சிற்றிகைம் ,ஸ்ராஸ்பூர்க் மற்றும் இல்கிரிச் ,எர்த்தைன்,பேர்பெட், பொல்மர்,முலூசு நகரசபைகளில் சந்திப்புக்களை மேற்கொண்டு மனுக்கையளிக்கப்பட்டதோடு

இன்று (01.03.2023)மாலை சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்திற்குள்  நுளைந்தது, போராட்ட பயணத்தில் ஈடுபட்ட அனைவரையும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களும் மக்களும் இணைந்து வரவேற்றனர்.தொடர்ந்து பயணித்த நீதிக்கான ஈருருளிப் பயணம் St_Louis granze என்ற இடம் வரை பயணித்து மாலை நிறைவடைந்தது.நாளை பாசல் மானிலத்திலிருந்து ஆரம்பமாகி பல மானிலங்களை ஊடறுத்து 06.03.2023 அன்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையை சென்றடையவுள்ளது.அதனைத் தொடர்ந்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

ஈருருளிப்பயணத்தினை மேற்கொள்ளும் அறவழிப்போராட்டக்காரர்களை ஒவ்வொரு நாட்டு மக்களும் வரவேற்று, உணர்வெழுச்சியுடன் தங்களது ஆதரவினை வழங்குவதோடு, இப்போராட்டங்களில் இணைந்து கொள்ளுவதும் காலத்தின் கடமையென்பதை உணர்ந்து பயணிப்போம்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

என்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணா அரசியல் எழுச்சியினை உளமேற்று பயணிப்போம்.

“இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது”

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் ஈருருளிப் பயணம் சுவிஸ் நாட்டிற்கு சென்றது! 1
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் ஈருருளிப் பயணம் சுவிஸ் நாட்டிற்கு சென்றது! 2
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் ஈருருளிப் பயணம் சுவிஸ் நாட்டிற்கு சென்றது! 3
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments