தமிழ்தேசிய மக்கள் முன்னணியினை துரத்தும் புலனாய்வாளர்கள்!

You are currently viewing தமிழ்தேசிய மக்கள் முன்னணியினை துரத்தும் புலனாய்வாளர்கள்!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியினை துரத்தும் புலனாய்வாளர்கள்!
வடக்கில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைகளை கண்காணிக்கம் நடவடிக்கையில் படைமற்றும் காவல்துறைபுலனாய்வாளர்கள் பின்தொடர்ந்து கண்காணிக்கம் நடவடிக்கையினை முடக்கிவிட்டுள்ளார்கள்.
இன்னிலையில் இன்று கனகராயன் குளப்பகுதியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் பெண் வேட்பாளரும் அவரின் ஆதரவாளர்களும் மக்களின் வீடுகளுக்கு சென்று தேர்தல் பரப்புரையினை முன்னெடுக்க முற்பட்ட போது புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்பட்டு தடுக்கப்பட்டுள்ளார்கள்.
தெற்கினை சேர்ந்த பெரும்பான்மை கட்சிகள் மற்றும் வடக்கின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் என பல கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டாலும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் சுதந்திரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட புலனாய்வாளர்கள் தடை விதித்து வருகின்றாமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள