தமிழ்மொழியின் முகம்

You are currently viewing தமிழ்மொழியின் முகம்


ஆண்டாண்டு காலமதாய்
மாறி மாறி ஆண்ட
மாற்றானின் காலில்
சுருண்டு கிடந்த தமிழினத்தை
வெகுண்டெழ வைத்த
தானைத்தலைவனை
வையகத்தில் தந்த வள்ளலே
ஞாலத்தில் தமிழ்க்குலத்தின்

வாழ்விற்காய்
காலத்தின் காவியத்தை

கருவறையில் சுமந்தவரே

அம்மா நீ எங்கள்
அண்ணைத்தமிழின்
அடையாளம்!
விண்ணைக்கிழித்த
வீரம்பரம்பரைமொழியின்
கருவறை!
யாருக்குமே கிடைக்காத
பிரம்மையை பிரசவித்த
பொக்கிஷம்!
நீர் இல்லாது உயிரில்லை
நீயில்லாது
நிமிர்வில்லை!
உன்னாலே எல்லாம்
நிகழ்ந்தது.

உன் இருப்பு எல்லாளன் சிலையருகில்
அதனாலே கருவில் மூண்டது
பெரு நெருப்பு
தோழியின் வலியில் துடித்தது
நின் இதயம்!
இதனாலே மலர்ந்தது
இரவி இல்லா இரவில்
ஓர் உதயம்!

வாழையடி வாழையாய்
வளைந்து நெளிந்த இனத்தில்
வந்துதித்தான் உன் தருமன்!
கோழையாய் வாழ்ந்தவனும்
கோபம் கொண்டெழுத்தான்
நிமிராத பிடரியை
நிமிர்த்தி நின்றான்!

தீராத வலியெல்லாம் தீர்ந்ததென்று
மார்புயர்த்தி வாழ்ந்தோம்!
கோடான கோடி கனவுகளில்
கோலோச்சி எழுந்தோம்!

எல்லாமே
மலையே மண்டையில்
சரிந்து வீழ்ந்ததாய்
சிதைந்து போனது
அலையலையாய் பொங்கிய
கனவுகள் கானல் நீராய்
கரைந்து போனது.

ஆனாலும்
தாயே நீ தந்த தமிழ்வீரத்தில்
வினைத்திறனாய்
வெளிவருவோம்!
நீ விதைத்த விடுதலையின் நெருப்பில்
சூடு தணியாது
எம் பாடு பொருளை
அடைவோம்.

தூயவன்

பகிர்ந்துகொள்ள