தமிழ் இனப்படுகொலையாளி பதவி விலகல்!

You are currently viewing தமிழ் இனப்படுகொலையாளி பதவி விலகல்!

இராணுவத் தளபதி இனப்படுகொலையாளி ஜெனரல் ஷவேந்திர சில்வா எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.

இதையடுத்து, தற்போதைய இராணுவ தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் ஜுன் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் இனப்படுகொலையாளி ஜெனரல் ஷவேந்திர சில்வா பாதுகாப்பு படை தளபதிகளின் பிரதானியாக கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இனப்படுகொலையாளி இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தற்போது பாதுகாப்பு படைகளின் பதில் பதவிநிலை பிரதானியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்றொழித்தவரும் தமிழ்ப்பெண்களை பாலியல் வன்முறை செய்வதற்கு இராணுவத்திற்கு உந்து சக்தியாகவும் இருந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாது கடந்த 13 ஆண்டுகளாக திட்டமிட்ட மறைமுக தமிழின அழிப்பை வடகிழக்கில் செய்துவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments