தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள்!

You are currently viewing தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள்!

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும் இன்று கொழும்பு தமிழ்ச் சங்க கலாவினோதன் மண்டபத்தில் நடைபெற்றது. அதன்படி இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய தலைவராக எஸ்.ஸ்ரீகஜன் தெரிவுசெய்யப்பட்டார். செயலாளராக கே.ஜெயந்திரன் தெரிவுசெய்யப்பட்டார்.

உப தலைவர்களாக லியோ நிரோஷ தர்ஷனும், தர்மினி பத்மநாதனும், உப செயலாளராக சு.சிவசண்முகநாதனும் தெரிவுசெய்யப்பட்டனர். பொருளாளராக ப.விக்னேஸ்வரனும், உப பொருளாளராக எஸ் வாஸ் கூஞ்ஞைனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஆர்.சிவராஜா, எஸ். அனந்த் பால கிட்ணர், என். ஜெயகாந்தன், வீ.பிரியதர்ஷன், ஆர்.சேதுராமன், கி.லக்ஸ்மன் சிசில், பிரியங்கா சந்திரசேகரம், கே.ஹரேந்திரன், கே.பிரசன்னகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

மேலும், வடக்கு மாகாண இணைப்பாளராக கணபதி சர்வானந்தா, கிழக்கு மாகாண இணைப்பாளராக எஸ். சரவணன் மற்றும் மலையக இணைப்பாளராக சிவலிங்கம் சிவகுமாரன் ஆகியோருடன் ஒன்றியத்தின் மேலதிக இணைப்பாளராக தர்மினி பத்மநாதனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments