தாங்களவே திருந்திக் கொள்ள வேண்டும்!இல்லை எனில்  தர்ம அடிகொடுக்கப்படும்!!

You are currently viewing தாங்களவே திருந்திக் கொள்ள வேண்டும்!இல்லை எனில்  தர்ம அடிகொடுக்கப்படும்!!

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில் ஆவா குழு (PTK 001) எனும் பெயரில் அனாமதேய துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.குறித்த துண்டுப்பிரசுரத்தில் பாலியல் துஸ்பிரயோகம், மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் என தவறு செய்வோர் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்பட இருக்கின்றது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-புதுக்குடியிருப்பில் நடந்துகொண்டிருக்கும் சில தவறுகள் தண்டிக்கப்படவேண்டியவை. அவற்றில் சில தவறுகள் எமது குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பல தடவைகள் அறிவுறுத்தியும் யாரும் கருத்தில் கொள்ளவில்லை என்பதால், தற்போது எமது குழுவினர் தகுந்த தண்டனை வழங்க முன்வந்துள்ளனர்.

அத்துடன் பாடசாலை மாணவர்கள், மாணவிகள் போதை மருந்து பாவித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.இவர்கள் அனைவரும் இதில் இருந்து தாங்களவே திருந்திக் கொள்ள வேண்டும். இல்லை எனில் வீதியோரத்தில் நிக்கவைத்து தர்ம அடிகொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments