திருகோணமலையில் பிக்குகள் அடாவடித்தனம்.

You are currently viewing திருகோணமலையில் பிக்குகள் அடாவடித்தனம்.

திருகோணமலை இலுப்பைக் குளத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து   [12.08.2023] சனிக்கிழமை, நேற்று காலை
அப்பகுதியின் கடும் போக்கு பௌத்த பிக்குகளால் இனவாத ரீதியிலான போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

இலுப்பைக்குளம் பிரதான வீதியில் ஒன்று கூடிய 10,ற்கும் மேற்பட்ட பிக்குகளும் சில சிங்கள இனவாதிகளும் பல்வேறு இனவாத கோசங்களை எழுப்பியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன்,  ஆளுநர் செந்தில் தொன்டமான் ஆகியோர் குறித்தும் கண்டித்துக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த சிறீலங்கா காவல்த்துறையினர் பிக்குகளுடன் கலந்துரையாடி  அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இதேவேளை தமிழர் தாயகப் பகுதிகளில் அண்மை நாட்களாக சிங்கள இனவாதிகளாலும், பௌத்த பிக்குகளாலும் பல்வேறுபட்ட பௌத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும்
அதனைத்  தடுக்கும் வகையில் தமிழ்மக்கள் போராட்டம் நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
திருகோணமலையில் பிக்குகள் அடாவடித்தனம். 1

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments