முல்லைத்தீவு திருகோணமலையில் 24 மணிநேரத்தில் 716 பேருக்கு தொற்று!!

You are currently viewing முல்லைத்தீவு திருகோணமலையில் 24 மணிநேரத்தில் 716 பேருக்கு தொற்று!!

திருகோணமலை மாவட்டத்தில் 24 மணித்தியாலத்திற்குள் 215 கொவிட்19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 272 பேருக்கு கடந்த 17, 18ஆம் திகதிகளில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 81 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 26 பேர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வருபவர்கள் எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பூம்புகார் பகுதியில் 65 பேருக்கு பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 65 பேருக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மூதூர் பிரதேசத்தில் 23 பேருக்கும் குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய பிரிவில் 16 பேருக்கும், கிண்ணியாவில் ஆறு பேருக்கும், குச்சவெளி பிரதேசத்தில் பத்து பேருக்கும், கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ரொட்டவெவ கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கும், பதவிசிறிபுர பிரதேசத்தில் 6 பேரும் தம்பலகாமத்தில் இருவரும் இனங் காணப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் குறிப்பிட்டார்.

இதேவேளை நோய் அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக பரிசோதனைக்கு முன்வரவேண்டும் எனவும், எவரும் தங்களுக்கு ஏற்ற விதத்தில் மருந்துகளை பாவிக்க வேண்டாம் எனவும் வைத்திய ஆலோசனையை பின்பற்றி நடக்குமாறும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை


முல்லைத்தீவு மாவட்டத்தில்  இதுவரை 501 பேருக்குக் கொரோனாத் தொற்று இனம் காணப்பட்டுள்ளதாகவும் 1310  குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments