திருகோணமலை கடலில் மிதந்த சடலம்!

You are currently viewing திருகோணமலை கடலில் மிதந்த சடலம்!

திருகோணமலை- இலிங்க நகர் கடற்பகுதியில் கடலில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக துறைமுக சிறீலங்கா துறைமுக காவல்துறையினர் தெரிவித்தனர்

குறித்த கடல் பரப்பில் இன்று மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் குறித்த சடலம் மிதப்பதை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் மற்றும் மீனவர்கள் இணைந்து குறித்த சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை இலிங்க நகர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சண்முகநாதன் கருணாகரன் (வயது-49) எனவும் தெரியவருகிறது.

குறித்த சடலத்தை திருகோணமலை மாவட்ட பதில் நீதவான் தர்ஷினி அன்னதுரை முன்னிலையில் குடும்பத்தினர் அடையாளப்படுத்தினர். மேலும் குறித்த சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் இதன்போது நீதிவான் கட்டளையிட்டார்.

குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை துறைமுக சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments