திருடப் போனவர்களை மடக்கிப் பிடித்து நையப்புடைத்த பிரதேச மக்கள்!

You are currently viewing திருடப் போனவர்களை மடக்கிப் பிடித்து நையப்புடைத்த பிரதேச மக்கள்!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட முயன்ற சங்கானை பகுதியை சேர்ந்த ஐவர் மற்றும் இரணைப்பாலை பகுதியை சேர்ந்த ஒருவர் என அறுவரை பிடித்த பிரதேச இளைஞர்கள் அவர்களை நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை, வீட்டுக்குள் புகுந்து கொள்ளையிட முயன்றபோது, உரிமையாளர் எழுந்து சத்தமிட்டதையடுத்து, அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அதிகாலை 2.30 மணி முதல் காலை 6.00 மணிவரை 8 ஆம் வட்டார இளைஞர்களுடன் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் ஏனைய கிராமத்தினை சேர்ந்த இளைஞர்களும் தேடுதல் நடத்தியபோது மூன்று திருடர்கள் மந்துவில் பகுதியில் வைத்து இளைஞர்களால் மடக்கிபிடித்து கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து கத்தி, கோடரி போன்ற கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்ட நிலையில் கொள்ளையர்களை வீதியில் இழுத்து வைத்து நையப்புடைத்துவிட்டு புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருடப் போனவர்களை மடக்கிப் பிடித்து நையப்புடைத்த பிரதேச மக்கள்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments