திருமலையில் புத்தர் அமர்வது நிறுத்தம்!

You are currently viewing திருமலையில் புத்தர் அமர்வது நிறுத்தம்!
திருகோணமலை வில்லூன்றி முருகன் ஆலயத்துக்கு சொந்தமான காணியில் புத்தர் சிலை வைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை திருமலை அரச அதிபர் வழங்கியுள்ளதாக, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் திரு. சுகாஷ் கனகரத்தினம், ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்தில் வைக்கப்படவிருந்த “தாய்லாந்து புத்தர்” சிலை, அவ்விடத்தில் வைக்கப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களின் நியாயப்பாடுகளை புரிந்துகொண்ட தாய்லாந்து அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ள திரு. சுகாஷ், எனினும், இத்தகைய உத்தரவாதம் வழங்கப்பட்ட பின்னரும் இராணுவமும், காவல்துறையும் அவ்விடத்தில் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றநிலை தொடர்கிறதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments