தீப்பந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலந்தமடு தமிழ்ப் பண்ணையாளர்கள்!

You are currently viewing தீப்பந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலந்தமடு தமிழ்ப் பண்ணையாளர்கள்!

மட்டக்களப்பில் தமிழ்ப் பண்ணையாளர்களின் கால் நடைகளின் பெரும் மேச்சல்த்தறை அமைந்துள்ள எல்லைக் கிராமங்களான மயிலந்தமடு, மற்றும் மாதவனை பகுதிகளை அடாத்தாக ஆக்கிரமித்து சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் சிங்கள பெரும்பான்மை இனத்தவர்களை அங்கிருந்து வெளியேற்றி தமது மேச்சல்த் தறைகளை மீட்டுத் தருமாறு கோரி,

அப்பகுதி தமிழ்ப் பண்ணையாளர்களால் சித்தாண்டி பிரதான சாலையோரம் கொட்டகை அமைத்து
இரவு பகலாக சுழற்சி முறையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம்,

இன்று- (04.10.2023) புதன்கிழமை -20,வது நாளாகவும் எதுவித தீர்வுகளுமின்றித் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இந் நிலையில் இன்று இரவு-7.30, மணியளவில் அங்கு கொட்டும் மழைக்கு மத்தியிலும் சாலை ஓரத்தில்
நீண்ட வரிசையில் நின்ற பண்ணையாளர்களால் தீப்பந்தங்கள் ஏந்திய நீதி கோரிய
போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தீப்பந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலந்தமடு தமிழ்ப் பண்ணையாளர்கள்! 1 தீப்பந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலந்தமடு தமிழ்ப் பண்ணையாளர்கள்! 2

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments