தெல்லிப்பழையில் இளைஞனுக்கு வாள்வெட்டு! – வானில் தப்பிய கும்பல் மீது காவற்துறை சூடு.

You are currently viewing தெல்லிப்பழையில் இளைஞனுக்கு வாள்வெட்டு! – வானில் தப்பிய கும்பல் மீது காவற்துறை சூடு.

யாழ்ப்பாணம் -தெல்லிப்பழை பகுதியில், ஹயஸ் வானில் சென்ற குழு, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்திய நிலையில், பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

தெல்லிப்பழை சிறீலங்கா பொலிஸ் நிலையத்திற்கு அருகில், நேற்று மாலை 5.30 மணியளவில், இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இளைஞர்கள் சிலர், மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் ஹயஸ் வானில் வந்த வாள்வெட்டுக் குழு ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு, மருதனார்மடம் நோக்கி தப்பிச் சென்றுள்ளது.

இதன்போது, சிறீலங்கா பொலிஸ் நிலையம் முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மோட்டார் சைக்கிளில், வாள்வெட்டுக் குழுவை துரத்திச் சென்ற போதும், ஹயஸ் வான் தப்பிச் சென்றுள்ளது.

இதனால், ஹயஸ் வானை நோக்கி சிறீலங்கா பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தில் காயமடைந்த இளைஞர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments