தேசிய ரீதியில் மட்டக்களப்பு மாணவன் ரோபோ தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் சாதனை !

You are currently viewing தேசிய ரீதியில் மட்டக்களப்பு மாணவன் ரோபோ தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் சாதனை !

தேசிய ரீதியில் மட்டக்களப்பு மாணவன் ரோபோ தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் சாதனை ! 1

மட்டக்களப்பு பாடசாலை மாணவன் ஒருவர் ரோபோ தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் தேசியமட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மகரகம தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தில் இடம்பெற்ற தேசிய மட்ட ரோபோ தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப் போட்டியில் மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்திற்குபட்பட்ட செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தைச் சோந்த நான்கு மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இப்போட்டியில் கே.வி.பவிலாஸ் எனும் மாணவனே இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இம் மாணவனின் வெற்றிக்கு வழிகாட்டி ஆலோசனை வழங்கிய வித்தியாலய அதிபர் க. சந்திரகுமார் மற்றும் ஆசிரியர்களான எஸ்.கலைச்செல்வன், ரி.பிறேம்குமார், என். செந்திபன், இ.கோமேஸ்வரன், அத்துடன் (பல்கலைக்கழக மாணவன்) ஆர்.றஜீவனன் விசேடமாக தொழில்நுட்ப வளவாளர எஸ்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் இம்மாணவனின் வெற்றிக்கு உரம் சேர்த்துள்ளனர்.

பாடசாலைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனையைப் பெற்றுக் கொடுத்துள்ள மாணவர்களுக்கும் அதற்கு உறுதுணையாகவிருந்த அதிபர் ஆசிரியர்களுக்கும் கல்விச் சமூகத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

மேலும் இப்பாடசாலையில் ரோபோ தொழில்நுட்பத்தில் மேலும் புதிய படைப்புக்களைச் செய்து முன்னேற்றம் காண்பதற்கு சகலரினதும் ஒத்துளைப்பை எதிர்பார்ப்பதாக பாடசாலைச் சமூகம் தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments