தையிட்டியில் விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு போராட்டம்!

You are currently viewing தையிட்டியில் விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு போராட்டம்!

பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழ், வலிவடக்கு தையிட்டியில் கவனயீர்ப்பு போராட்டம் ஓன்று முன்னெடுக்கப்பட்டது.

இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பொதுமக்களும்  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பில் இன்று பிற்பகல் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பேரணியாக நகர்ந்து தையிட்டி விகாரை வரை சென்றது.

இதேவேளை

தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்தும், சிங்கள குடியேற்றத்தை நிறுவும் நோக்கில் விகாரையை சுற்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு கோரியும் அப்பகுதி மக்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டத்தில் உள்நுழைந்த சிறிலங்கா இராணுவத்தினரும், பொலிஸாரும் அப்பகுதிச் செல்லும் வீதிகளை மூடி அங்கிருப்பவர்களை கைது செய்ய செய்ததோடு
போராட்டத்திற்காக போடப்பட்ட மக்களின் கூடாரங்களை பிடுங்கியெறிந்தும் அடாவடி செய்தமை குறிப்பிடத்தக்கது.

 

தையிட்டியில் விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு போராட்டம்! 1

 

 

தையிட்டியில் விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு போராட்டம்! 2

 

 

தையிட்டியில் விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு போராட்டம்! 3

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments