தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் மீண்டும் போராட்டம்!

You are currently viewing தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் மீண்டும் போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியை ஆக்கிரமித்து சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட திஸ்ஸ என்ற விகாரையை அகற்றக்கோரியும், விகாரையுடன் இணைத்து ஆக்கிரமிக்கப் பட்டுள்ள மக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைக்கக் கோரியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்டன எதிர்ப்புப் போராட்டத்தின் அடுத்த கட்டப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (29.08.2023)
பிற்பகல்-(04) மணிக்கு தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதியின் முன்பாக ஆரம்பமாகி நடைபெறும்
இப்போராட்டம்  (30.08.2023) நாளை புதன்கிழமை இரவு-(07) வரை நடைபெறும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொண்டு சட்டவிரோத விகாரையை அகற்றவும் மக்களின் காணிகளை மீட்டெடுக்கவும், கண்டனக் குரல் எழுப்பி எதிர்பைக் காண்பிக்க வருமாறு
அழைப்பு விடுப்பதாகவும் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் மீண்டும் போராட்டம்! 1

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் மீண்டும் போராட்டம்! 2

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் மீண்டும் போராட்டம்! 3

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments