தையிட்டி சட்ட விரோத விகாரைக்கென தனியார் காணிகளை நில அளவீடு செய்வதற்கெதிராக பெரும் போராட்டம் !

You are currently viewing தையிட்டி சட்ட விரோத விகாரைக்கென தனியார் காணிகளை  நில அளவீடு செய்வதற்கெதிராக பெரும் போராட்டம் !

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டியில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை அம் மக்களின் அனுமதி இன்றி அடாத்தாக ஆக்கிரமித்து – சிங்கள இனவாதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக கட்டப்பட்ட தையிட்டி “திஸ்ஸ” என்ற சட்டவிரோத விகாரைக்கு என,

விகாரை அமைந்துள்ள பகுதியுடன் இணைத்த தனியார் காணிகளை நிரந்தரமாகக் கையகப்படுத்தி ஆக்கிரமிப்புச் செய்வதற்கு நில அளவைத் திணைக்களத்தால் எதிர்வரும்,

( 12.09.2023) செவ்வாய்க்கிழமை நில அளவீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளமையைக் கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் மாபெரும் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று தையிட்டியில் நடாத்தப்படவுள்ளது.

இதற்கான அழைப்பைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தற்போது
விடுத்திருக்கின்றது.

 

 

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments