தொடரும் சீரற்ற காலநிலை பாதிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

You are currently viewing தொடரும் சீரற்ற காலநிலை பாதிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

இலங்கையில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை பாதிப்பு காரணமா உயிரிழந்தவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 172,132 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

747 குடும்பங்களைச் சேர்ந்த 2,905 பேர் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

1,442 குடும்பங்களைச் சேர்ந்த, 5,084 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments