நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்!

You are currently viewing நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்!

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க் கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்தபோது 2 சிறிய ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

அப்போது இலங்கை கடற்படையினர் கப்பலில் இருந்தபடி கற்களை வீசி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இலங்கை கடற்படைக்கு பயந்து மீனவர்கள் குறைந்த அளவிலான மீன்களுடன் நேற்று காலை கரை திரும்பினார்கள். நடுக்கடலில் நடந்த தாக்குதல் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமேசுவரம் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது மீனவர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments