நாகர்கோவிலில் கடலால் ஒதுங்கிய பானத்தை அருந்தி ஒருவர் பலி!

You are currently viewing நாகர்கோவிலில் கடலால் ஒதுங்கிய பானத்தை அருந்தி ஒருவர் பலி!

யாழ் வடமராட்சிக்கிழக்குக் கடலில் கரையொதுங்கிய ஒருவகை பானத்தை மதுபானமென கருதி அதை அருந்திய 20 பேரில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்று மாலை இனம்தெரியாத பானம் நிரம்பிய போத்தல் கடல்க்கரையொதுங்கியுள்ளது அதனை எடுத்து 20 பேர் பருகியுள்ளனர் ஒருவருக்கு உடலில் உடனடியாக பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இறந்தவர் வடமராட்சிக்கிழக்கு நாகர்கோவில் கிழக்கைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தையா சிறீகுமார்(அகவை 46)என தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து ஏனையவர்களும் உடல் பரிசோதனைக்கு தம்மை உட்படுத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

பகிர்ந்துகொள்ள