நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

You are currently viewing நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

இந்த வார இறுதியில் ரஷ்யாவின் திட்டமிட்ட வெற்றி தின கொண்டாட்டங்களுக்கு முன்னதாக உக்ரேனிய பொதுமக்களுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டமிட்டபடி வெற்றி தின கொண்டாட்டங்களை தலைநகர் மாஸ்கோவில் முன்னெடுக்க உள்ளார். மே 9ம் திகதி முன்னெடுக்கப்படும் இந்த கொண்டாட்டங்களுக்காக தற்போது ஒத்திகைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமது அணு ஆயுத பலம் மற்றும் இராணுவ பலத்தை வெளிக்காட்டுவதற்காக ரஷ்யா இந்த வாய்ப்பை பயன்படுத்தும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்யப் படைகள் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை தொடர்புடைய நாளில் அதிகரிக்கக்கூடும் என்று உக்ரேனிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மட்டுமின்றி, பொதுமக்கள் கண்டிப்பாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொது ஒழுங்கை கண்டிப்பாக பின்பற்றவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ரஷ்யா வெற்றி தின கொண்டாட்டங்களை முன்னெடுத்துவரும் இந்த நாட்களில், உக்ரைன் மக்கள் கண்டிப்பாக வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளை புறக்கணிக்க கூடாது எனவும் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.

உங்கள் உயிர் முக்கியம் என்பதை புரிந்துகொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி விழிப்புடன் இருங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளில் மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதிகளில் ரஷ்யா கண்ணிவெடிகளை புதைத்து சென்றிருக்கலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, மரியுபோல் நகரில் ரஷ்யா வசம் சிக்கியுள்ள இரும்பு தொழிற்சாலையில் இருந்து பெண்கள், சிறார்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பலர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments