நாளை மட்டக்களப்பில் ஊரடங்கு தளர்த்தப்படும் போது என்ன செய்ய வேண்டும்?

You are currently viewing நாளை மட்டக்களப்பில் ஊரடங்கு தளர்த்தப்படும் போது என்ன செய்ய வேண்டும்?

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா மக்களுக்கு விடுக்கும் பணிவான அறிவித்தல் நாளை காலை 6.00 மணிக்கு ஊரடக்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. அவ்வேளைகளில் பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுவது அவசியமாகும்.

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பொது மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் பல செயல்த்திட்டங்கள் மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்தாகவும் இது மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடக பிரிவுக்கு தெவித்தார்.

பகிர்ந்துகொள்ள