நினைவுத் தூபி இடிப்பு – ஐரோப்பிய ஒன்றியம் கவலை!!

You are currently viewing நினைவுத் தூபி இடிப்பு – ஐரோப்பிய ஒன்றியம் கவலை!!

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவம் கவலையை அளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டமை கவலையளிக்கிறது. இந்தச் சம்பவம் மற்றும் அண்மைய காலங்களில் இடம்பெற்ற வேறுபல சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலத்தில் நடைபெறவிருக்கும் உயர்மட்டப் பிரதிநிதிகளின் கூட்டத்தின்போது ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கான நியாயாதிக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள