நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லை எனில் இந்தப் புதைகுழிக்கான நீதி கிடைக்குமா என துரைராஜா-ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார் !

You are currently viewing நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லை எனில் இந்தப் புதைகுழிக்கான நீதி கிடைக்குமா என துரைராஜா-ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார் !

நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லை எனில் இந்தப் புதைகுழிக்கான நீதி கிடைக்குமா என முல்லைத்தீவு மாவட்ட அரசியல் செயற்பாட்டாளரும் முன்நாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான துரைராஜா- ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (01.10.2023) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சர்வதேச சிறுவர் நாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் உறவுகளால் தொடர் போராட்டம் நடாத்தப்பட்டு வரும் இடத்திற்கு முன்பாக உறவுகளால் நடாத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பெற்றோர்கள் இறுதியாக ஒப்படைத்த சிறுவர்கள் இன்று வரை காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களைத்தேடி நாளாந்தம் வீதிகளிலேயே இருந்து தங்களது உறவுகளுக்காக “2000”நாட்களைக் கடந்த நிலையில் போராடிக் கொண்டிருக் கிறார்கள்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது சங்கத்தினால் ஒப்படைத்த உறவுகளைத் தேடி ஒவ்வொரு தினங்களிலும் போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள்,

இதற்கு ஒரு முடிவு தேவை என பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது நீதிபதியினுடைய விவகாரம் வந்திருக்கிறது.

நீதித்துறை சுயாதீனமாக இயங்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போது அந்த நீதித்துறையையே ஆட்டம் காணச் செய்யும் அளவிற்கு அரசியல் ரீதியாக அரசாங்க தரப்புக்கள் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தும் பல வகையில் துன்புறுத்தி முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நாடு விட்டு நாடு சென்றுள்ளார்.

கொக்குத் தொடுவாய் புதைகுழி விவகாரம் நடைபெறுகிறது புதைகுழி கூட மூடி மறைக்கப் படுமோ என்ற அச்சம் இருந்து கொண்டு இருக்கின்றது.

பல திணைக்களங்கள் சேர்ந்து அகழப்படும் அகழ்வில் நீதி கிடைக்குமா? நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் இந்தப் புதைகுழிக்கான நீதி கிடைக்குமா?

எதிர்வரும் -30,ம் திகதி அடுத்த அகழ்வு எனக் கூறப்பட்டது அந்த அகழ்விலும் இந்த நீதியை எதிர்பார்க்கலாமா? என்ற கேள்வி எழுகின்றது என்னிடம் மட்டுமல்ல மக்களிடமும் எழுகின்றது என துரைராஜா- ரவிகரன் மேலும் தெரிவித் துள்ளார்.
நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லை எனில் இந்தப் புதைகுழிக்கான நீதி கிடைக்குமா என துரைராஜா-ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார் ! 1

நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லை எனில் இந்தப் புதைகுழிக்கான நீதி கிடைக்குமா என துரைராஜா-ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார் ! 2

நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லை எனில் இந்தப் புதைகுழிக்கான நீதி கிடைக்குமா என துரைராஜா-ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார் ! 3

நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லை எனில் இந்தப் புதைகுழிக்கான நீதி கிடைக்குமா என துரைராஜா-ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார் ! 4

நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லை எனில் இந்தப் புதைகுழிக்கான நீதி கிடைக்குமா என துரைராஜா-ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார் ! 5

நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லை எனில் இந்தப் புதைகுழிக்கான நீதி கிடைக்குமா என துரைராஜா-ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார் ! 6

நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லை எனில் இந்தப் புதைகுழிக்கான நீதி கிடைக்குமா என துரைராஜா-ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார் ! 7

நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லை எனில் இந்தப் புதைகுழிக்கான நீதி கிடைக்குமா என துரைராஜா-ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார் ! 8

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments