நீதிமன்றத்தின் முன் தோன்றுவதற்கு ஏன் பயம் ?

You are currently viewing நீதிமன்றத்தின் முன் தோன்றுவதற்கு ஏன் பயம் ?

சிறிலங்கா அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால், எவரும் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லையென்றால் சர்வதேச நீதிமன்றத்தின் முன் தோன்றுவதற்கு ஏன் பயப்படுகின்றீர்கள் என இலங்கை அரசாங்கத்தை நோக்கி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (06) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு, இலங்கை அரசாங்கம் மற்றும் படையினரை சர்வேதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துங்கள் எனவும் அதன் பின்னர்தான் யார் கடத்தலில் ஈடுபட்டார்கள், யார் காணாமல் செய்யப்பட்டார்கள், எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள் மற்றும் இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன எனும் அனைத்து மர்மங்களும் வெளியில் வரும் என வி.மணிவண்ணன் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் , நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி கிழக்கு மாகாணத்திலும் பாரிய மாற்றமொன்றை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்படுத்தும் என வி.மணிவண்ணன் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள