நெடுந்தீவு கிழக்கு பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு !

You are currently viewing நெடுந்தீவு கிழக்கு பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு !

நெடுந்தீவு கிழக்கு பகுதி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் நேற்று முன்தினம் (02.10.2023) மீட்கப்பட்டுள்ளது.

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டதால் உயிரிழந்தவரை அடையாளம் காணமுடியாத நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் தடயவியல் பொலிஸார் சடலம் கரையொதுங்கிய பகுதிக்கு நேற்று (03) காலை சென்று பார்வையிட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக நெடுந்தீவு சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments