பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மோகனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்!

You are currently viewing பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மோகனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவரும் செங்கலடி செல்லம் சினிமா குழுமத்தின் உரிமையாளருமான கணபதிப்பிள்ளை மோகனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செங்கலடியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த 2ஆம் திகதி ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மோகன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

72 மணித்தியாலங்கள் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்ட அவரை, நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் பொலிசாரால் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவ்வேளையில், சந்தேகநபரான மோகனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிவான் கறுப்பையா ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments