பளையில் கப் வாகனம் மோதி 12 வயதுச் சிறுவன் பலி!

You are currently viewing பளையில் கப் வாகனம் மோதி 12 வயதுச் சிறுவன் பலி!

பளை- முல்லையடி பகுதியில் ஏ -9 வீதியில், பாதை மாறுவதற்காக துவிச்சக்கரவண்டியில் வீதி ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுவனை யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக பயணித்த கப் ரக வாகனம் மோதித் தள்ளியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் பளை முல்லையடியைச் சேர்ந்த 12 வயதான ராஜபாஸ்கரன் ஐதுர்சிகன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பளை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments