பாடசாலையொன்றிற்கு அருகில் குண்டுவெடிப்பு 30 பேர்பலி!

You are currently viewing பாடசாலையொன்றிற்கு அருகில் குண்டுவெடிப்பு 30 பேர்பலி!

ஆப்கான் தலைநகர் காபுலில் பாடசாலையொன்றிற்கு வெளியே இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தவேளை இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்டவர்கள் பலர் மாணவிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கார்குண்டு தாக்குதலே இடம்பெற்றது என ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாக சம்பவம் இடம்பெற்ற பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்

நான் புழுதி மற்றும் புகைமண்டலத்திற்கு நடுவில் பல உடல்களை பார்த்தேன் என ஒருவர் தெரிவித்துள்ளார். 

தாயொருவர் தனது பிள்ளைகளை பெயர் சொல்லி அழைத்து தேடுவதை பார்த்தேன் பின்னர் அவர் தனது மகளின் இரத்தம் தோய்ந்த பேர்ஸை கண்டார் அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார் என ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments