பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் ரயில் மோதி மரணம்!

You are currently viewing பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் ரயில் மோதி மரணம்!

பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்தார். நேற்றுப் பிற்பகல் 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி டிப்போ வீதியில் ரயில் நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான ரயில்வே கடவை மூடப்பட்டிருந்த நிலையில், அதனைக் கடக்க முற்பட்டவரையே ரயில் மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சிவராசமுத்தையா சசிவதனன் எனும் 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments