பிரான்சு, ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா வர தற்காலிகத் தடை!

  • Post author:
You are currently viewing பிரான்சு, ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா வர தற்காலிகத் தடை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரான்சு, ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா வர தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாட்டினர் இந்தியா வருவதற்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசாக்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக குடியுரிமைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இம்மூன்று நாடுகளை சேர்ந்தவர்களை தவிர இங்கு கடந்த 1-ஆம் தேதிக்கு பின்னர் சென்ற பிற நாட்டினருக்கும் இந்தியாவுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வர தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள