பிரான்ஸில் பயங்கரம்: மாற்றுத்திறனாளிகள் கட்டிடத்தில் தீ விபத்து – 11 பேர் பலி!

You are currently viewing பிரான்ஸில் பயங்கரம்: மாற்றுத்திறனாளிகள் கட்டிடத்தில் தீ விபத்து – 11 பேர் பலி!

பிரான்ஸில் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஜேர்மனி எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பிரான்ஸின் வின்ட்ஸென்ஹீம் நகரத்தில் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 17 பேர் உடனடியாக கட்டிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

ஆனால் 2வது மாடியில் சிக்கிக் கொண்ட 11 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் தீயை போராடி அணைத்தனர்.

இதற்கிடையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து பிரான்ஸ் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments