பிரித்தானிய வாசி யாழில் அடித்து கொலை!

You are currently viewing பிரித்தானிய வாசி யாழில் அடித்து கொலை!

யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த ”13 நாட்களாக” சிகிச்சை பெற்று வந்தவர் நேற்றைய 05.07.2020 தினம் உயிரிழந்துள்ளார்.
யாழ். நீர்வேலி மேற்கைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான, ”செல்வநாயகம் ஜெயசிறி” என்பவருடைய மரணம் குறித்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிரேம்குமார் தெரிவித்துள்ளார்…

கடந்த முப்பது வருடங்களாக ”லண்டனில் வசித்து வந்த இவர் தாயாரைப் பார்க்க வருகை தந்திருந்த நிலையில் அயலவர் ஒருவருக்கு கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட போது ஏற்பட்ட வாய் தர்க்கத்தினாலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது…

பகிர்ந்துகொள்ள