வடக்கில் படையினரின் கண்காணிப்பு தீவிரம்!

You are currently viewing வடக்கில் படையினரின் கண்காணிப்பு தீவிரம்!

வடக்கில் படையினரின் கண்காணிப்பு தீவிரம்!
தமிழர்தாயகத்தின் வடக்கில் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக படையினர் வீதிகளில் சோதனை நிலையங்கள் அமைத்து வருவதுடன் மன்னார்,வவுனியா மாவட்டங்களில் புதிய சோதனை சாவடிகளை நிறுவி வருகின்றார்கள் இதேவேளை இரவு நரேங்களில் வீதிகள் எங்கும் படையினரின் நடமாட்டத்தினையே அவதானிக்கமுடிந்துள்ளதாகவும் இரவு வேளைகளில் வீதியால் செல்லும் மக்களை அடையாளஅட்டை,சாரதி அனுமதிப்பத்திர சோதனைக்கு உட்படுத்தி அவர்களை பதிவு செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாகதாயகத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்துகொள்ள