புகைத்தல் மதுபானம் பாவித்தால் கொரோனா தாக்கும்!

You are currently viewing புகைத்தல் மதுபானம் பாவித்தால் கொரோனா தாக்கும்!

புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துவதை தவிர்ந்து கொள்ளுமாறு சிறீலங்காவின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துவதின் ஊடாக கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் புகைத்தல் மற்றும் மது அருந்துவதை தடுப்பதற்கான நடவடிக்கைளை எடுக்குமாறு, சிறீலங்காவின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சிறீலங்கா ஜனாதிபதியைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன், நாட்டிலுள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள