வடக்கில் 4 கொரோனா முகாம்கள்!

You are currently viewing வடக்கில் 4 கொரோனா முகாம்கள்!

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்தி வைத்து கண்காணிப்பதற்காக வடபகுதியில் நான்கு மையங்கள் அமைக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மாவட்டத்தில் பலாலி, கொடிகாமம் ஆகிய இடங்களிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுவிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு பகுதியிலுமே இவை அமைக்கப்படவுள்ளன.

கொடிகாமத்தில் இராணுவத்தினரும், ஏனைய பகுதிகளில் விமானப்படையினரும் இதனை முன்னெடுக்கும் பணியைத் துரிதமாக மேற்கொண்டுவருவதாக ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

சிறீலங்கா அரசாங்கத்தினால் தழிர்தேசத்தில் மேற்க்கொள்ளப்படும் திட்டமிட்ட செயற்பாடுகளால் மக்களும் தமிழ்க்கட்சிகளும் தமது எதிர்ப்பையும் கண்டணத்தையும் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள